Wednesday, May 25, 2005

திரை இசையில் சில ராகங்கள் - பகுதி 3

இந்த சண்டை சச்சிரவு நிறைந்த உலகத்தில் இசை ஒன்றுதான் எல்லோரையும் இணைக்கும் பாலமாகயிருக்கிறது. சங்கீதத்திற்கு எந்த வேறுபாடும் கிடையாது மொழி,மதம் தாண்டி அனைவரும் ரசிக்கும் ஒன்று.



நம் சாஸ்த்ரிய சங்கீதத்தில் வரும் ராகங்களுக்கு ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களை போக்கும் சக்தி இருப்பதாக நம்ப்படுகிறது.

'Healing Power of Music' இந்த விஷயத்தை தற்பொழுது நம்மூரிலும் மற்றும் வெளிநாட்டிலும்பலர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பல ஆஸ்பத்திரிகளில் Music Therapy அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ராகத்திர்க்கும் ஒரு நோயை குணப்படுத்தும் சக்தியிருப்பதாக நம்ப்படுகிறது.

இந்த முறை இங்கே கோடுக்கப்பட்டுள்ள கீர்த்தனைகள் அனைத்தும் கர்நாடக சங்கீதத்தின் மூம்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ( 1767-1847) அவர்கள் இயற்றியது.

சரி இந்த முறை சினிமாவில் அதிகம் உபயோகிக்காத சில ராகங்களை பற்றி பார்ப்போம்.

1) ராகம்:கவுளா
இந்த ராகத்தின்
ஆரோகணம் ஸ ரி1 ம1 ப நி3 S
அவரோகணம் ஸ நி3 ப ம1 ர்1 க3 ம1 ரி1 S

அருமையான ராகம். பூபாள ராகத்தைப்போல இதுவும் ஒரு காலை ராகம். இத மாயாமாளவ ராகத்திலிருந்து வந்த ஜன்ய ராகமாகும்.

பாடல் : துடுகள
பாடியவர் : பால முரளி கிருஷ்ணா
ராகம் : கவுளா
தாளம்: ஆதி
இயற்றிவர்: திரு தியாகராஜர்

இப்பாடல் தியாகராஜரின் மிக பிரபலமான பஞ்சரத்தின கிருத்திகளில் ஒன்று. பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்

இப்போ இதே ராகத்தில் அமைந்த இந்த அருமையான திரைப்பட பாடலை கேளுங்கள்.
இந்த ராகத்தில் அமைந்த திரைபாடல் இது ஒன்றே,
இளையராஜாவை தவிர மற்ற இசையமைபாளர்கள் இதை ஏனோ சீண்டவில்லை. :(

பாடல்: வேதம் நீ இனிய நாதம் நீ
படம் : கோவில் பூறா
பாடியவர்: கே ஜே யேசுதாஸ்
இசை: இளையராஜா

பாடுவதற்க்கு மிகவும் சவாலான விறுவிறுப்பான பாடல், திரு யேசுதாஸ் மிகவும் அருமையாக பாடியிருப்பார்.
இப்பாடலில் வரும் வயிலின், வீணை, புல்லாங்குழல், மிருந்தங்கம், ஜலதரங்கம் மற்றும் bass guitar இத்தனை வாத்தியங்களின் கோர்வைகள்அவ்வளவு அருமை.
ராஜா சாரின் சின்ன அபிப்ப்ராயங்கள் படு ஜோர்.
தாளத்தை சமத்துக்கு (on beat) கோண்டு வந்து பிறகு அதேயே ஒன்னு தள்ளி திஸ்ரமாக மாற்றுவார்.

இந்த பாடலை கேட்க இங்கே
சொடுக்கவும்

2) ராகம்: நளினகாந்தி
அரோகணம் ஸ க3 ரி2 ம1 ப நி3 ஸ
அவரோகணம் ஸ நி3 ப ம1 க3 ரி2 ஸ

இதுவும் ஒரு ஜன்யராகம், இந்த ராகம் ஸரஸாங்கி ராகத்திலிருந்து வந்தது.
மிகவும் அழகனா, 'நளினமான' ராகம் :)

பாடல்: மனுவ்யாலகிம்
இயற்றிவர்: தியாகராஜர்
தாளம்: ஆதி
பாடியவர்கள்: பாம்பே சிஸ்டர்ஸ்

தியாக ப்ரம்மத்தின் பல கீர்த்தனைகளில், மிகவும் ப்ரிபலமான பாடல்களில் இதுவும் ஒன்று.
இந்த பாடலை கேட்க இங்கே
சொடுக்கவும்

இப்போ இதே ராகத்தில் அமைந்த சினிமா பாடல்..

பாடல் : எந்தன் நெஞ்சில் நீங்காத
படம் : கலைஞன்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : யேசுதாஸ், ஜானகி

பாடலை கேட்க இங்கே
சொடுக்கவும்
[song link நன்றி
http://www.dhool.com/]

எனக்கு தெரிந்தவரை இந்த ராகத்தை சினிமாவில் முதன் முதலில் பயன்படுத்தியவர் ராஜா சார்தான்.
இந்த பாட்டின் நடுவே வரும் ஸவ்ரங்களை ராஜா சார் பாடியிருப்பார்.
கமலஹாசன் நடித்த மட்டரக படத்தில் இதுவும் ஒன்று, ஆனால் அந்த படத்தில் இப்படியோரு அருமையான 'classic' song.

திரு தேவா அவர்களும் இதே ராகத்தில் ஒரு ஹிட் பாடலை தந்துள்ளார்.

பாடல் : மனம் விரும்புதே

படம் : நேருக்கு நேர்
இசை : தேவாபாடியவர்: ஹரிணி

இந்த பாடலை கேட்க இங்கே
சொடுக்கவும்

ஹரிணி மிக அழகிய ப்ரிஹாக்கள் எல்லாம் கோடுத்து பாடிய அருமையான பாட்டு. சிம்ரன் தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் ?!
தேவா இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டில் இதுவும் ஒன்று.

3) பிலஹரி - மிகவும் கம்பீரமான ஒரு ராகம், வீரம், காதல் போன்றவற்றுக்கு சரியான ராகம்.
அரோகணம் : ஸ ரி2 க3 ப த2 ஸ
அவரோகணம் : ஸ நி3 த2 ப ம1 க3 ரி2 ஸ

இதுவும் ஒரு ஜன்ய ராகம், இந்த ராகத்தின் அம்மா தீர சங்கராபரணம்.
முதலில் இந்த ராக்த்தில் அமைந்த ஒரு கீர்த்தனை

பாடல் :பரித்தன மின்சித்தே
தாளம் : கண்ட சாப்பு
இயற்றியவர்: தியாகராஜர்
பாடியவர் : யேசுதாஸ்


இந்த பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்

இப்போ இதே ராகத்தில் அமைந்த சினிமா பாடல்..

பாடல் : கூந்திலிலே மேகம் கண்டு
பாடியவர்: யேசுதாஸ்
படம் : பாலநாகம்மா

மிகவும் அற்புதமான பாட்டு. கலபடமில்லாத அக்மார்க் பிலஹரி.யேசுதாஸ் மிக அற்புதமாக பாடியுள்ளார். ஸ்வரம், ஜதி எல்லாம் இந்த பாட்டில் இருக்கும்

இதுவும் பாடுவதற்க்கு சவாலான பாட்டு.
இந்த பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்
[நன்றி http://www.dhool.com/]

பாலநாகம்மாவில் சரத்பாபு ஹீரோ, ஸ்ரீதேவி ஹீரோயின். சரத்பாபு ஹீரோவாக நடித்து ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

பாடல் : நீ ஒன்றுதானா சங்கீதம்
படம் : உன்னால் முடியும் தம்பி
பாடியவர்: யேசுதாஸ்

இந்த பாடலை கேட்க இங்கே
சொடுக்கவும்

4) ராகம்: ஸ்ரீ


அரோகணம் ஸ ரி2 ம1 ப நி2 ஸ

அவரோகணம் ஸ நி ப த2 நி2 ப ம1 ரி2 க2 ரி2 ஸ


மிகவும் சுகமான, அழகான ராகம். மனம் அமைதி அடையச்செய்யும் தன்மை இந்த ராகத்திற்கு உண்டு.இதுவும் ஒரு ஜன்ய ராகம், அம்மா கரகரப்ரியா.
கர்நாட இசையில் இந்த ராகத்தில் அமைந்த மிக ப்ரிபலமான பாடல்

திரு தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனையான 'எந்தரோ மஹானு பாவலு'
பாடியவர்: திரு பால முரளி கிருஷ்ணா

இந்த பாட்டின் அடிப்படை கருத்து இந்த உலகத்தில் திறமை மிக்கவர்கள் பலர் உள்ளனர் அவர்கள் அனைவருக்கும்என்(தியாகராஜர்) சிரம் தாழ்ந்த வந்தனம்.


இப்பொது இதே ராகத்தில் அமைந்த இந்த பாட்டை கேளுங்கள்

பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய்

படம் : என் சுவாசகாற்றே

பாடியவர்கள்: எஸ்பி பாலா, சித்ரா

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பாடல்: சுக ராகமே

படம்: கன்னி ராசி

பாடியவர்: மலேசியா வாசுதேவன்

இசை: இளையராஜா

இந்த பாடலை படத்தில் ஜனகராஜ் பாடுவார்.?!!

குறிப்பு:

Carnatic music has one of the most complex thala systems among the world's music systems. Both in terms of the mathematical ranges and rhythmic varieties or thalams used, Carnatic music has no parallel.

Tala is bascially a time-measure and it is executed in cyclical pattern. concept. Therefore, it has a beginning and an end and is repeated until the composition ends.When a tala cycle is sub-divided into units of time - e.g. 4, 8, 6, 16, 9 etc. - various thalams are produced.


ஆதி தாளம் - cycle of 8 beatsNormally each beat will consist of four pulses. Because there is a spoken language of carnatic rhythm, we could say that Adi tala consists of 8 x 4 = 32 words.
Because of the thala strucutres, the role of a percussionist in Carnatic music (e.g. mridangam player) is far more intense and demanding than in any other system of music.

The percussionist in the Carnatic music system does not merely keep time and provide the basic sarva laghu (four-beats). The percusionist must go beyond time-keeping and must judiciously and dexterously bring out the mood and emotion of a composition.

Therefore, the percussionist would play a variety of mathematically-timed rhythmic patterns. This requires that the percussionist undergo significant training not only in producing various rhythmic patterns but also in developing musical acumen to know when a certain rhythmic pattern will be appropriate.

Monday, May 09, 2005

சில விளம்பர நினைவுகள்


சென்னை மற்றும் இலங்கை வானொலியில் அடிக்கடி வரும் பழைய விளம்பரங்கள் சில நினைவுக்கு வந்தன
இதோ...("ஞாபகம் வருதே ஞாபகம் வருதே"!!)


1) என்ன ஆச்சு குழந்தை அழுதது!! வுட்வொட்ர்ஸ் கிரைப் வாட்டர் கொடுக்க சொல்லு
2) சொட்டு நீலம் டோய் .. ரிகல சொட்டு நீலம் டோய்
3) கோபால் பல் பொடி, சிங்கை மற்றும் இலங்கையில்..(கர கர குரலில்)
4) ஏ ஒன் கிளினிங்க் பவுடர் .. பாத்திரங்கள் பளபளக்க கண்ணாடி பீங்காங்கள் மினுமினுக்க
5) சரவணா ஸ்டோ ர்ஸ் எவர்சில்வர், பித்தளை ..
6) லைப்பாய் ஏவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே
7) மான் மார்க் குடைகள் மான் மார்க் குடைகள்
8) பொன்வண்டு பொன்வண்டு போட்டு பாருங்க வெள்ளை துணிகள் பளித்திட வைக்கும் பொன்வண்டு
9) இனிமே லேட்டா வந்தா அர்ச்சனா ஸீவிடோ டுதான் வரணும்.
10) இது எல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் பொய் இதயம் நல்ல எண்ணெய் வாங்கிட்டு வாங்கனா வாங்கிட்டு வாங்களேன்.
11) பேஷ் பேஷ் நரசுஸ் காபினா நரசுஸ் காபிதான் (உசிலை மணி)
11) ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்.
12) வந்தானே வந்தானே எக்கொலெக்ஸ் மாவீரன் வந்தானே.
13) Excuse me. நீங்க எந்த காலேஜ்? காலேஜா நானா ?!! மம்மி.. சந்தூர் சோப்
14) வஜ்ர தந்தி வஜ்ர தந்தி விக்கோ வஜ்ரதந்தி!! (திரை அரங்குகளில் இதை போட்டு போட்டு ,எரிச்சல கிளப்புவாங்க )
15) நிர்மா நிர்மா வாஷிங்க் பவுடர் நிர்மா...

இவ்வளவுதான் ஞாபகத்துக்கு வருது, நீங்களும் உங்க பங்குக்கு பழைய விளம்பரம் ஒன்னுத்த இஸ்து வுடுங்க ...
பெருசுங்க யாராச்சும் இத படிச்சா இன்னும் கோஞ்சம் சொல்லுவாங்கனு நினைக்கிரேன்.
இதுல உங்களுக்கு எது பிடிக்கும் எது எரிச்சல கிளப்பும்முனு சொல்லுங்க..

Thursday, April 21, 2005

திரை இசையில் சில ராகங்கள் - பகுதி 2

முந்தைய பகுதியில் நான் சில ராகங்களை குறிப்பிட்டு எவ்வாரு இசையமைபாளர்கள்அவர்கள் இயற்றும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் எவ்வாரு ராகங்களை உபயோக்கித்துள்ளார்கள் என்று பார்த்தோம்.
நான் முன்பே கூறியதைப்போல திரை இசையில் சாஸ்திரிய இசைக்குண்டான மரபு எல்லாம் தேவை இல்லை. எந்த இசையமைப்பாளரும் "நான் இன்று இந்த ராகத்தில்தான் டியூன் போடுவேன்" என்று சொல்லமாட்டார். அந்த சமயத்தில் கதையில் வரும் சம்பவத்திற்கேட்ப, தம் மனதில் தோன்றும் இசைக்கேற்றவாரு டியூனை அமைப்பார்.
ராகங்களுக்கு நம் மன உணர்வை சுண்டியிழுக்கும் சக்தியூண்டு. இதை பற்றி பிறகு விரிவாக எழுதுகிரேன். சரி இப்ப ராகத்திற்கு போவோம்.


1) ராகம்: ஹம்ஸத்வனி - மிகவும் கம்பீரமான ராகம்
கர்நாடக இசையில் திரு முத்துசுவாமி தீட்ஷிதர் அமைத்த 'வாதாபி கணபதிம் பஜே' மிகவும் பிரபலமான பாடல். இந்த ராகத்தில் கணபதி/பிள்ளையார் மேல் அமைந்த நிறைய பாடல்கள் இருக்கிறது.கச்சேரிகளில் இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை முதலில் பாடுவது வழக்கம் (கச்சேரி களை கட்டும்).
திரை இசையில் இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பிரபலம். திரு இளையராஜா இந்த ராகத்தில் பல அருமையான பாடல்களை தந்துள்ளார் அத்துனையும் 'ஹிட்'
அவற்றில் சில..

பாடல் : மயிலே மயிலே உந்தன்
படம் : கடவுள் அமைத்த மேடை
பாடியவர்கள் : எஸ். பி பாலா., ஜென்ஸி
வரிகள் : வாலி

இந்த படம் 1979ல் வெளிவந்தது என்று நினைக்கிரேன். திருமதி ஜேன்ஸி அந்த கால கட்டத்தில் (1978-1982) பல பாடல்களை பாடியுள்ளார், அதில் முக்காவாசி ராஜா, மற்றும் திரு கங்கை அமரன் அவர்கள் இசைமைத்தவை.
பிறகு திருமதி ஜேன்ஸி திரைப்படங்களுக்கு பாடுவதை ஏனோ நிறுத்திவிட்டார்.
இந்த பாடலை கேட்க இங்கே சொடுக்கவும் !


பாடல் : மலர்களே நாந்தஸ்வரங்கள்
படம் : கிழக்கே போகு ரயில்
பாடியவர் : மலேசியா வாசுதேவன்

பாடல் : காலம் மாறலாம்
படம் : வாழ்க்கை
பாடியவர்கள்: எஸ். பி பாலா, வாணி ஜேயராம்

பாடல் : தேர்க்கொண்டு வந்தவன்
படம் : எனக்குள் ஒருவன்
பாடியவர் : பி சுசிலா

2) ராகம் : சுத்த தன்யாசி
இதுவும் மிக கம்பீரமான ராகம், மனத்தில் உற்சாகம் எற்படுத்த செய்யும் சக்தி இந்த ராகத்திற்கு உண்டு. காலம்காலமாக இந்த ராகத்தில் பல இசையமைப்பாளர்க்ள் பல பாடல்களை தந்துள்ளனர். இந்த ராகத்தில் அமைந்த அத்தனை பாட்டும் 'ஜாலியான' குஷியான பாடல்கள தான். இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சுப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லவும் வேண்டுமா ?

பாடல் : கண்களும் கவி பாடியதே
படம் : அடுத்த வீட்டு பெண்
வரிகள் : டி என் ராமய்யா தாஸ்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன்
இசை : ஆதி நாரயணராவ்

பாடல் : நீயே உணக்கேன்றும்
பாடியவர்: டி எம் செளந்திர ராஜன்
படம் : பலே பாண்டியா
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்

மேலே சொன்ன பாடல்கள் இரண்டிலும் ஒர் ஒற்றுமை உண்டு அடுத்து வீட்டு பெண்ணில் ராமசந்திரன் அடுத்த வீட்டு பெண்ணை மடக்க பாடுவது போல் வாய் அசைத்து நடிப்பார், தங்கவேலு இவருக்கு கொரல் கொடுப்பார், மிகவும் வேடிக்கையாக இருக்கும். பலே பாண்டியாவில் இப்பாடலுக்கு சிவாஜியும், எம் ஆர் ராதாவும் செய்யும் லூட்டியும் எந்த சிடுமுஞ்சிகாரனையும் சிரிக்க வைத்துவிடும். பாலாஜிதான் பாவம் திருட்டு முழி முழிப்பார்!! அவர் கடம் வாசிக்கிரேன் பேர்வழின்னு கடத்தை இம்சைபடுத்துவார்.
டி எம் சார் என்ன கம்பீரமாக இப்பாடலை பாடியுள்ளார்.
இதை கேட்க இங்கே சொடுக்கவும் !


இதே ராகத்தில் காலத்தால் அழிக்க முடியாத மிக அருமையான பாடலை தந்துள்ளனர் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள். என்ன பாடலதுன்னு யோசிக்கிரங்களா?

பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே

படம் : கர்ணன்
பாடியவர் : பி சுசிலா
வரிகள் : கவிஞர் கண்ணதாசன்

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும். !

திரு இளையாராஜா அவர்கள் இசையில் இந்த ராகத்தில் அமைந்த பாடல்கள் இல்லையா? அப்படினு யோசிகிரவங்களுக்குபதில் நிறைய !! நிறைய!!
அவற்றில் எனக்கு பிடித்த சில


பாடல் : விழியில் விழுந்து

படம் : அலைகள் ஒய்வதில்லை

பாடியவர் : இளையராஜா, சசிரேகா

வரிகள் : வைரமுத்து


இந்த படம் 1981ல் வெளிவந்தது.

மிசை முளைக்காத கார்த்திக், மற்றும் ராதா அறிமுகமான படமாச்சே இன்னிக்கும் கேட்டாலும் அலுக்காத மனதை வருடும்அருமையான ரோமாண்டிக் பாடல்.

"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே" - வைரமுத்துவின் வைர வரிகள்!!
பாடலை கேட்க இங்கே சொடுக்கவும் !

பாடல் : மாஞ்சோலை கிளிதானோ மான் தானோ

பாடியவர் : ஜேயசந்திரன்

படம் : கிழக்கே போகும் ரயில்

வரிகள் : முத்துலிங்கம்


இந்த படம் 1978ல் வந்தது , கிளி பேச்சு ராதிகா, அப்ப அவங்க கொஞ்சி கொஞ்சித்தான் பேசுவாங்க. ஹிரோ சுதாகர் ,அப்ப வந்த பல படங்களில் அவருதான் ஹீரோ , அப்பறம் மனுஷன் காமடியான மாறி தெலுங்கு பக்கம் பொயிட்டாரு பாவம்.இந்த பாடலை அருமையாக பாடியுள்ளார் ஜேயசந்திரன், இவரும் ஜேசுதாஸ் போல மலயாளி ஆனா இவர் தமிழ் உச்சரிப்புமிக சுத்தமாகவும், அழகாவும் இருக்கும். இளையாராஜா இசையில் பாடுவதற்கு சவாலான பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.இந்த பாடலையே எடுத்திகிட்டீங்கனா இடையில் (அநுபல்லவி) மூச்சு விடமான பாடிய பாட்டு, நீங்களும் கூடவே பாடி பாருங்க புரியும்.பாடலை கேட்க இங்கே சொடுக்கவும் !


மேலும் வரும்.

Saturday, April 09, 2005

சர்வாதிகாரி முஷ்ஷாராப்புக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பா ?!!

சர்வாதிகாரி முஷ்ஷாராப்புக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பா ?!!
சர்வாதிகாரிக்கு உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு தலைவணங்குவதா?!
இந்தியர்களுக்கு (அரசியல்வாதிகள்!!) மட்டும்தான் இத்தகையான பகைவனை மன்னிக்கும்

பரந்த மனம்!! .
யார் இந்த முஷ்ஷாராப் ?!!
ஜனநாயக்தில் நம்பிக்கையில்லாதவர், Butcher of Kargil, சர்வாதிகாரி போரின் முலமே எல்லாவற்றிக்கும் தீர்வு என்பதில் திடமாக முள்ளவர்,
இந்தியா எங்களின் பரம எதிரி என முழங்குபவர்,
இந்திய பிரதமர் பாகிஸ்தான் சென்றபொழுது அவர்க்கு மரியாதை தர மறுத்தவர்
இவருக்கு நாம் ஏன் தரவேண்டும் மரியாதை?!!
அவரேன்ன மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதியா?

சர்வாதிகாரியே திரும்பி செல்!!

Tuesday, March 29, 2005

திரைஇசையில் சில ராகங்கள்

இந்திய திரைபடங்களில் பாடல்கள் மிக அவசியமானது.
இந்த இசை பொதுவாக situational music, அதாவது திரைகதையில் நிகழும் சம்பவங்களுக்கு ஏற்ப பிண்ணனி இசை மற்றும் பாடல்கள் இயற்றபடுகிறது.
இன்றும் பாப் ஆல்பங்களைவிட திரைப்படபாடலுக்குத்தான் மவுசு ஜாஸ்தி.

அன்றிலிருந்து இன்றுவரை சில குறிப்பிட்ட காட்சிகள், மற்றும் சம்பவங்களுக்கு பெரும்பாலான இசையமைப்பாளர்கள்சில குறிப்பிட்ட ராகங்களின் அடிபடையில் அமைந்த டியூனை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர், சினிமாவில் அப்படி மிகவும் 'cliched' ஆகி போன ராகங்கள் என்னவென்று பார்ப்போம்.


1) ராகம் - சிவரஞ்சனி - பெரும்பாலும் காதல் தோல்வி, மற்றும் நாயகன்/நாயகி பிறிவு இந்த மாதிரியான சம்பவங்களுக்கு பல இசை அமைப்பாளர்கள் இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை இயற்றியுள்ளார்கள்.
இந்த ராகத்தில் அமைந்த சில பிரபலமான பாடல்கள்..

பாடல் : நலம் தானா நலம் தானா
படம் : தில்லானா மோகனாம்பாள்
இசை : கே.வி. மகாதேவன்


[pic source tfmpage.com]
பாடல்: தேரே மேரே பீச்மே
படம் : ஏக்துஜே கே லி யே
இசை: லஷ்மிகாந்த் ப்யாரிலால்



பாடல்: ஜானே காஹா
படம் : மேரானாம் ஜோக்கர்
இசை: சங்கர் ஜேய் கிஷன்

[pic indianmelody.com]
படம் : என் ராசாவின் மனசுல
பாடல்: குயில் பாட்டு
இசை: இளையராஜா


[pic dinakaran.com]
சமீபத்தில் வெளியான காதல் படத்தில் வந்த 'உனக்கென இருப்பேன்' பாட்டும்
இதே ராகத்தின் சாயலில் அமைந்த பாடல்.
இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை பட்டிலியிட்டு மாளாது.
சினிமாவை பொருத்தவரை சிவரஞ்சனியயை 'காதலர்களின் துயர கீதம்' எனலாம்.
சினிமாவை பொருத்தவரை இது ஒரு 'cliched' ராகம்!!
புது இசை அமைப்பாளர்களாவது இனிமேல் இந்த ராகத்திலே சோககீதம் இசைக்காமல் வேர டியூன் போட்டால் நல்லது.

இந்த ராகத்தில் அமைந்த சந்தோஷமான பாடல்களே இல்லையா? என்று நீங்கள் கேட்டால்
பதில்இருக்கிறது!!

ரஹ்மான் இசையில்.
திருடா திருடாவில் 'கண்ணும் கண்ணும்'

'ராக்' அமைப்பில் அமைந்த அருமையான பாடல்.

2) ராகம்: சுபபந்துவராளி
திரை இசையய் பொருத்தவரை இதுவும் ஒரு 'cliched' ராகம்.
மிகத்துயரமான சம்பவங்கள், மரணம் போன்ற சம்பவங்களுக்கு இந்த ராகம்தான் பிண்ணனி இசையாய் கேட்கும். குறிப்பாக ஷனாய், அல்லது வயலினில் இசைத்து நம்மை அழ செய்யும்.
இந்த 'அழுகுண்ணி' ராக்திலும் நம்மை சந்தோஷமாக ஆடசெய்ய முடியும் என நிருப்பித்துள்ளார்கள்
இளையராஜாவும், ரஹ்மானும்.

பாடல் : கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்
படம் : குரு சிஷ்யன்
இசை : இளையராஜா

பாடல் : யாரோ சுன்லொ ஜரா
படம் : ரங்கீலா
இசை : ரஹ்மான்


[pic greatandhra.com]

3) ராகம்: ஷண்முகப்ரியா- பக்திரசம் நிரைந்த ராகம், குறிப்பாக முருகக்கடவுளை போற்றி நிறைய பாடல்கள் உள்ளன. ஆனால் பின்னர் இதே ராகத்தில் பல காதல் ரசம் நிறைந்த பாடல்களும் வந்துள்ளது.

பாடல் : மறைந்திருந்து பார்க்கும்
படம் : தில்லானா மோகனாம்பாள்
இசை : கே வி மகாதேவன்

பாடல் : தம்தன தம்தன ராகம் வரும்
இசை : இளைய ராஜா

இதே ராகத்தில் ஜாலியான துள்ளல் பாடல்கள் உண்டு

பாடல்கள் : காதல் கசக்குதய்யா , ஊருவிட்டு ஊரு வந்து
படம் : ஆண் பாவம், கரகாட்டகாரன்
இசை: இளையராஜா


மேலே சொன்ன பாடல்களை கேட்க இந்த இனைதளங்களுக்கு செல்லவும்


http://www.dhool.com/

(திரு பாலாஜி அவர்கள் நடத்திவரும் அருமையான இனைத்தளம்)

Friday, February 25, 2005

அசல் நகல் !!


சென்ற வாரம் 'பிளேன்ஸ் டிரைன்ஸ் அண்டு ஆட்டோ மொபைல்ஸ்' என்ற ஆங்கில படம் பார்த்தேன்.பழைய படம் தான், 1987ல் வெளிவந்தது.

பிரபல நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் மார்டிண் மற்றும் ஜான் காண்டி நடித்த படம்.

படத்தின் கதை இது தான். தொழில்நிமித்தமாக நியூயார்க் செல்கிறார், ஒரு சிடுமூஞ்சி பிசினஸ் எக்ஸிக்யூடிவ். பிறகு தன் மனைவி மக்களுடன் தாங்க்ஸ் கிவிங்கை கொண்டாட திரும்ப சிக்காகோ செல்கிரார். ஆனால் ஒழுங்காக வீடு போய் சேர்ந்தாரா ? என்பதுதான் கதை.

அவர் நியூயார்க்கில் டாக்ஸி பிடிக்க முயலும்பொழுது ஆரம்பிக்கிறது சோதனை, அவர் பிடித்த டாக்ஸியை வேரொருவர்லவட்ட, கடுப்பாகி ஒரு வழியாக விமானநிலயத்தை அடைந்தால் அங்கே அவரது விமானம் தாமதமாகிறது. கூடவே அதிகபிரசங்கியாய் ஒரு லொடலொட சகப்ரயாணி. அளவுக்கதிகமான நட்புடன் பழகும் சக ப்ரயாணியாக ஜான் காண்டி அற்புதமாக நடித்துள்ளார். அன்பு தொல்லை தரும் ஜானை கழட்டிவிட ஸ்டீவ் செய்யும் ஒவ்வொரு முயற்ச்சியும் தோல்வியில் முடிகிறது.

படம் நெடுக இவ்விறுவரும் நம்மை சிரிக்க செய்வதோடு அல்லாமல் சிந்திக்கவும் செய்துள்ளனர்.கடைசியில் 'சிடுசிடு' ஸ்டீவ், ஜானின் அன்புக்கு கட்டுபடுகிறார், ஒழுங்காக வீடு போய் சேறுகிரார், ஜானோடுதான்.

இந்த படத்தின் அடிப்படை கரு மற்றும் படத்தின் வரும் சம்பவங்கள் கமலஹாசனின் 'அன்பே சிவம்' படத்தில் வருவதுபோல் இருப்பதை உணர்ந்தேன்.அவர் சமீபத்தில் நடித்த படங்களையெல்லாம் ஒரு பட்டியல் போட்டேன். அவரின் பல படங்கள் ப்ரிபல ஆங்கில படங்களின் கதையைய் தழுவி இருப்பதை உணர்ந்தேன்.
இதோ பட பட்டியல், நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள் எது அசல் நகல் என்று.

1) Mrs. Doubtfire (1993, Robin williams)- அவ்வை ஷண்முகி

2) Green card(1990, Andie MacDowell, Gerard Depardieu) - நள தமயந்தி (படத்தின் அடிப்படை கரு)

3) Very Bad Things (1998) - பஞ்சதந்திரம்

4) What about Bob (1991, Bill Murray, Richard Dreyfuss) - தெனாலி

5) She-Devil (1989, Meryl Streep, Roseanne) - சதிலீலாவதி

6) Nine to Five (1980, Jane fonda, Dolly Parton) - மகளிர் மட்டும்

7) To Sir With Love (1967, Sidny Poitier) - நம்மவர்

8) Planes, Trains & Automobiles (1987, Steve Martin, John Candy)- அன்பே சிவம் (கதை கரு)

கமல் அபிமானிகள், அடிவருடிகள், மற்றும் விசில் அடிச்சான் குஞ்சுகளே தப்பா நினைச்சுக்காதீங்க.அவர் நடித்த படங்களுக்கும் மேலே சொன்ன ஆங்கில படத்திற்க்கும் உள்ள ஒற்றுமையை தான் சொன்னேன்.

ஒரு வேளை உலகத்தில் ஒரே சமயம் கதையாசிரியர்களுக்கு ஒரேமாதிரியான ஜடியா தோன்றி இருக்கலாம்.இதற்கு கமலஹாசன் என்ன செய்வார் பாவம்.
மேலே உள்ள அனைத்து படத்தின் விவரங்களும் மற்றும் தமிழ் படங்களின் விவரங்களையும் கீழே கொடுக்கபட்டுள்ள இணைத்தளத்தில் காணலாம்.
http://www.imdb.com/ .

Sunday, February 20, 2005

ஒரு 'சாம்பாரின்' கதை !!

'சாம்பார்' என்றாலே நம்ம எல்லாருக்கும் முதல்ல ஞாபகத்திற்கு வருவது இரண்டு விசயம்.
ஒண்ணு தினம் நாம் விரும்பி சாப்பிடும் 'சாம்பார்', இரண்டாவது காதல் மன்னன்.
இந்த இரண்டாவது வர 'சாம்பாருக்கும்' திரு ஜெமினி கணேசனுக்கும் என்ன சம்பந்தம்முனு
எனக்கு இன்னும் புரியலை. உங்கள்ள யாருக்காவது தெரியுமுனா சொல்லுங்க,
தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கிறேன்.

இப்போ முதல்ல சாப்பாட்டு 'சாம்பார்' விஷயத்துக்கு வருவோம்.
தமிழர்களின் தினசரி உணவில் சாம்பாருக்கு நிறந்திர இடமுண்டு , இதுக்கு எப்படி அப்படியொரு பேரு
வந்துச்சு தெரியுமா. ?

தஞ்சாவூரை ஆட்சி செய்த மராத்திய மன்னர் 'ஷாஜி' என்பவர்தான் சாம்பாரை கண்டுபிடித்ததாக
கருதப்படுகிறது. பருப்புடன் புளி கரைசலை சேர்த்து அவர் சாம்பாரை தயாரித்தார்.
அவரது உறவினர் 'சாம்பாஜ'஢ பெயரில் இதை 'சாம்பார் என்று அவர் அழைத்தார்.

அப்புறம் நம்ம அளுங்க இது பல காம்பினேஷன் வச்சு அசத்திட்டாங்க
அப்பாட ஒரு வழியா இந்த 'சாம்பார்' பெயர் ப்ரிச்சினை தீர்ந்தாச்சு.

சரி இன்னிக்கு உங்க வீட்டு சமையல்ல சாம்பார் உண்டா ?!!